வறுமை நாரெடுத்துக் கோர்த்த பூமாலை நாங்கள்.
எங்களில் பலர் குடும்பத்துக்கே சோறுபோடும் குடும்பத் தலைவர்கள்.
"ஏன் வேலைக்குப் போற" என்று கேட்பவர்களை மெளனமாகக் கடந்துவிடுகிறோம். முட்டாள்களுடன் நாங்களும் விவாதிப்பதில்லை.
'உணவுவேளை' என்று ஒன்று உங்களில் பலருக்கு உண்டு,
உணவு கிடைக்கும் வேளைதான் உணவுவேளை எங்களுக்கு.
பசியை ஒரு வார்த்தையாக அறிந்தவர்கள் நீங்கள். பசியை உணர்வாக அறிந்தவர்கள் நாங்கள்.
எந்த நடிகருக்காகவும் சண்டையிட்டதில்லை நாங்கள்.
எங்கள் ஹீரோ நாங்கள்தான்,
நாங்கள் எதிர்நோக்கும் சவால்களை எந்த ஹீரோவும் இதுவரை சந்தித்ததில்லை.
உங்கள் பரிதாபப்பார்வைகளை நிறுத்திவிட்டு, இந்த பட்டாணி சுண்டல்களை முடிந்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கிச் செல்லுங்கள்.
No comments:
Post a Comment