Friday, 15 August 2014

முதிர்கன்னி

பருவங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும்
பூமிக்கு வயதானது தெரியவில்லை.
ஆனால், தசைகளின் தொய்வில், தோலின் சுருக்கத்தில் என் வயது தெரிகிறது!
வந்து பார்த்த அனைவரும்
தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தொலைபேசி சொல்கிறது.
விளக்கைத் தேய்த்து சாமிக்கு பூஜை செய்யச் சொல்கிறாள் அம்மா,
நானோ விளக்கைத் தேய்த்துவிட்டு பூதத்திற்காகக் காத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment