Friday, 15 August 2014

ஒரு காட்சி

உச்சி வெயிலில் சாலையின் நடுவில்
ஒரு கட்டிடத் தொழிலாளி பேசிக்கொண்டிருந்ததை பயணம் செய்து கொண்டிருக்கும் பேருந்திலிருந்து காண்கிறேன். என்ன பேசியிருப்பான்?

அம்மாவிடம்:சாப்பிட்டேன், இப்போ ஓய்வெடுத்துகிட்டு இருக்கேன்மா

மனைவியிடம்:இந்த வருடக் கடைசியில் கண்டிப்பா ஊருக்கு வரேன்

பிள்ளையிடம்:சரிப்பா, நீ சொன்னதெல்லாம் அப்பா வரும்போது வாங்கிட்டு வரேன்

இத்தனையும் சொல்வதற்கு சற்று முன்புதான், தன் முதலாளியிடம் இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தன் வேலையை நீட்டிக்கச் செய்யும் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பான், வாங்கிய கடனுக்காக!

அல்லது....

நண்பனிடம்:டேய்! ஜிகர்தண்டா படத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து வை, சாயந்திரம் வேலை முடிஞ்சி நேரா வந்துர்றேன்.


No comments:

Post a Comment