என் ஒரு பையனுக்கு 4வயது. பள்ளி விடுமுறையில் அம்மா வீட்டுக்கு வந்திருந்தோம்.
அம்மா, நாங்கள் வந்த மறுநாளே ஆரம்பித்துவிட்டார். கிளம்புங்க கோயிலுக்குப் போகலாம் என்று. இன்னும் இங்கு இருக்கும் வரை தினமும் ஒரு கோயிலுக்கு கூட்டிப்போய் ஞானப்பால் ஊட்டுவார்.
அரச மரத்தடி பிள்ளையார் கோயிலில் இருந்து, ஆக்ஸிடெண்ட் கோயில்(ஒருமுறை,பள்ளிக் குழந்தைகள் சில ஒரு மரத்தடியில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது, பஸ் அவர்களை கொன்றுவிட்டது, அந்த மரம் சாமியாகிவிட்டது) போய், திருச்செந்தூர் வரை எல்லாக் கோயிலுக்கும் கூட்டிப் போவார். பொறுமையே தெய்வம்.
இன்று ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கோயில். இன்னும் கோயில் திறக்கவில்லை. கோயில் இருந்ததோ சாலையின் ஓரத்தில். பையனை ரோட்டுக்கு ஓடிவிடாமல் பிடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சலில் இருந்தேன். அவன் கோயிலைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தான். சற்று கவனம் மாறியபோது ரோட்டுக்கு ஓடிவிட்டான். பயந்து ஓடி இழுத்து வந்தேன். பளாரென்று முதுகில் ஒரு அறை வைத்தேன். 'ஓ'வென்று அழுதான். பளாரென்று கன்னத்தில் ஒரு அறை. இந்த முறை அறைவாங்கியது நான். அடித்தது அம்மா. அழுகை நின்றுவிட்டது பையனுக்கு!
பி.கு. இது கதையல்ல, நிஜம் :(
Friday, 15 August 2014
அறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment