Friday, 15 August 2014

அப்பாவும் நானும்

நான் 10வது படிக்கும்போது, ஒரு உறவினர் வீட்டில் தங்க நேர்ந்தது. அப்பாவின் மடியில் நான் தூங்கியதை அத்தை கிண்டல் செய்ததும், அப்பா விட்டுக் கொடுக்காமல் பேசியதும் நினைவில் இருக்கிறது.
நான் பாலிடெக்னிக் படிக்கும்போது, அப்பா ஞாயிறு என்னைப் பார்க்க விடுதிக்கு வருவதும், என் தோழிகள் அப்பாவைப் பார்த்து "உங்க அண்ணா மாதிரி இருக்கார்னு" சொன்னதும் நினைவில் இருக்கு.
திருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பின் விமான நிலையத்தில் அப்பா அழுததை முதலும் கடைசியுமாக பார்த்ததும் நினைவில் இருக்கிறது.
அப்பா-தாத்தா ஆனதும்..நான் தூங்கிய மடியில் என் பிள்ளைகளை தூங்க வைத்ததும் நன்றாக நினைவில் இருக்கிறது.
ஆனால் கடைசியாக அப்பாவிடம் என்ன பேசினேன்? என்ன சொன்னார்? எத்தனை முறை நினைவு படுத்தியும் நினைவுக்கு வரவில்லை. 

No comments:

Post a Comment