Friday, 15 August 2014

தினமும் ஒரு லெட்டர்

ஆமா! நிஜமாவே தினமும் ஒரு லெட்டர் எழுதிட்டு இருக்கேன் அவருக்கு. இப்போ எனக்கு 8மாசம். அம்மா வீட்ல இருக்கேன். அவர் சிங்கப்பூர்ல இருக்கார். போன மாசம் வரை அங்கதான் இருந்தேன். 
சிங்கப்பூர்ல இருந்த வரைக்கும் நாட்களை எண்ணிட்டு இருந்தேன் எப்போ அம்மா அப்பாவைப் பாக்கப் போறேன்னு. இப்போ அவரை எப்போ பாக்கப் போறேன்னு நாளை எண்ணிட்டு இருக்கேன். போன் பேசலாம்தான். என்னவோ லெட்டர் மனசுக்கு நெருக்கமா இருக்கும். 
எப்படி எனக்கு விஷயம் கிடைக்கிது தினமும் எழுத? :))) எனக்கே தெரியலை. 
பையன் பிறந்த உடனே பாஸ்போர்ட் எடுக்கனும்னு அப்பாவைத் தொல்லை பண்ணினேன். பாவம் அம்மாவும் அப்பாவும், குழந்தையைக் கொஞ்சனும்னு ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. அப்போ அதெல்லாம் புரியலை. குழந்தைக்கு மூணுமாசம் முடியும்முன்னாடியே, (கழுத்துகூட நிக்கலை) சிங்கபூருக்கு தூக்கிட்டு வந்துட்டேன்.
அவரை வேலைக்கு அனுப்பிட்டு, குழந்தையும் தூங்கின பிறகு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சேன்.
அப்போதான் பாத்தேன் டீவிக்குப் பக்கத்தில் ஒரு காகிதக் கட்டு. உண்மையில் அது கடிதக் கட்டு. ஆமா! நான் எழுதின கடிதங்களேதான். ஆனா எதுவுமே பிரிக்கப்படலை!


No comments:

Post a Comment