Thursday, 8 January 2015

ஹீரோ

நோ.. நோ.. நோ.. நோ.. இது அஜித் விஜய் பத்தினது இல்லை! இது நிஜ வாழ்க்கையின் ஹீரோ!

இவர், ITI படிச்சிட்டு, 20 வயசுல கிராமத்தில இருந்து சென்னைக்கு ஓடிப்போனார்! அன்னைலருந்து இது வரைக்கும் தன் அப்பா கிட்ட இருந்து ஒரு பைசா வாங்கலை.
தானே வேலை தேடி, தன் தம்பிகள் மூணு பேரையும் சென்னைக்கு வரவழைச்சார்.
தனக்கும் ரெண்டு தம்பிகளுக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கினார். ஒரு தம்பியை சென்னைலயே படிக்க வச்சார்.
தன் தங்கைக்கு நகை போட்டு கல்யாணம் செய்து வைத்தார். தானும் ஒரு கல்யாணம் பண்ணிட்டார்.
தன் விதவை அக்காவின் பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கித்தந்தார்.
இன்னும் நீண்டு கொண்டே போகும்... 
"ஆறிலிருந்து அறுபது வரை" ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லை.
கதைன்னா ஒரு ட்விஸ்ட் வேணும்ல?! ஒண்ணும் இல்லை! சும்மா, பகிர்ந்துக்கணும்னு தோணுச்சி அதான்.
Bye :)
ஆங்! சொல்ல மறந்துட்டனே, இவ்ளோ நேரம் சொன்னது என் கணவரைப் பத்திதான் ;)

No comments:

Post a Comment